நீர் மோர் பந்தலை திறந்து வைத்த அமைச்சர் தங்கமணி!

 

தமிழ்நாட்டில் வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், நீர் மோர் பந்தல்களை, அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் அமைத்து, மக்களின் தாகம் தீர்க்கவேண்டும் என, ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கேட்டுக்கொண்டனர். அதன்படி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் பகுதியில், பேருந்து நிலையம் அருகே, அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அதனை, மின்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்து, பொது மக்களுக்கு நீர் மோர், தர்பூசணி, இளநீர் ஆகியவற்றை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், பள்ளிபாளையம் முன்னாள் நகர மன்ற தலைவர் வெள்ளியங்கிரி, மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர் செந்தில் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

Exit mobile version