நவீன் குமாருடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு; மக்களுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும்

ஈரான் கப்பலில் சிறைபிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த நவீன்குமார் விடுதலை ஆனதை அடுத்து, மின்துறை அமைச்சர் தங்கமணி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்.

கடந்த ஜூலை மாதம் ஈரான் எண்ணெய் கப்பலை இங்கிலாந்து ராணுவம் சிறைபிடித்ததில், கப்பலில் பணிபுரிந்த திருச்செங்கோட்டைச் சேர்ந்த நவீன்குமார் என்ற பொறியாளரும் சிக்கி கொண்டார். இதனையடுத்து தமிழக அரசு மேற்கொண்ட முயற்சிகளாலும், மத்திய அரசின் வலியுறுத்தலாலும் நவீன்குமார் விடுவிக்கப்பட்டார்.

தமிழகம் திரும்பிய நவீன்குமாரை நேரில் சந்தித்து மின்துறை அமைச்சர் தங்கமணி நலம் விசாரித்தார். இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் தங்கமணி, நவீன்குமார் சிறைபிடிக்கப்பட்டதை அடுத்து அவரை பாதுகாப்பாக மீட்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, மத்திய அரசிற்கு கோரிக்கை விடுத்திருந்திருந்ததாகவும், அதன்பேரில் மேற்கொள்ளப்பட்ட உடனடியாக நடவடிக்கையால் நவீன்குமார் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளதாக கூறினார்.

மக்களுக்கு தமிழக அரசு என்றும் துணை நிற்கும் என்றும், இது போன்ற சம்பவங்களின் போது தனி கவனம் எடுத்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.

 

Exit mobile version