நாமக்கல் மாவட்டத்தில் அதிமுக கல்வெட்டுகளை திறந்து வைத்தார் அமைச்சர் தங்கமணி

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள பள்ளிபாளையம் ஒன்றியத்திற்குட்பட்ட 11 இடங்களில் மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கல்வெட்டுகளை திறந்து, கழக கொடியை ஏற்றி வைத்தார்.

4 ஊராட்சிகளில் உள்ள 11 இடங்களில் அதிமுக கல்வெட்டுகள் திறந்து, கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. அங்குள்ள சீரம்பாளையம் பேருந்து நிறுத்தம், குப்பாணடம்பாளையம், எம்ஜிஆர் நகர், கோட்டைமேடு உள்ளிட்ட பகுதிகளில் கழக கொடியை ஏற்றி வைத்து, கல்வெட்டுக்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Exit mobile version