தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? – அமைச்சர் தங்கமணி கேள்வி

தமிழகத்தில் மக்களாட்சி வேண்டுமா? மன்னராட்சி வேண்டுமா? என்பதை மக்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி கேட்டுக் கொண்டுள்ளார்

 

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிடும் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவை ஆதரித்து மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தேர்தல் பரப்புரை மேற்கொண்டார். அப்போது, வாக்காளர்கள் மத்தியில் பேசிய அமைச்சர் தங்கமணி, அதிமுகவின் நல்லாட்சி தொடர அமைச்சர் சரோஜாவிற்கு இரட்டை இலை சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் எனக் கூறினார். திமுகவினர் ஆட்சிக்கு வருவதற்கு முன்பே நில அபகரிப்பு செய்வது, சாப்பிட்டதற்கு பணம் கேட்டால் அடித்து உதைப்பது என அராஜக செயல்களில் ஈடுபட்டு வருவதாகவும் அமைச்சர் தங்கமணி குற்றம்சாட்டினார். 

Exit mobile version