கோவையில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில் அமைச்சர் எஸ்.பி வேலுமணி பங்கேற்பு

கோவை அருகே நடைபெற்ற முதலமைச்சரின் சிறப்பு குறைதீர் முகாமில், உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி கலந்து கொண்டு பொதுமக்களின் மனுக்களை பெற்றுக்கொண்டார்.

கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் பகுதியிலுள்ள கலையரங்கத்தில் நடைபெற்ற சிறப்பு குறைதீர் முகாமில், 542 பயனாளிகளுக்கு 4 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்.பி வேலுமணி வழங்கினார். பின்னர் பேசிய அவர், தேர்தலுக்காக மட்டும் மக்களை சந்திப்பவர்கள் அதிமுகவினர் இல்லை என்றும் எதிர்கட்சியினர் தவறான பொய்யான வாக்குறுதியை பரப்பி ஓட்டு வாங்கியதை மக்கள் புரிந்து கொண்டுள்ளதால் இடைத்தேர்தலில் மகத்தான வெற்றியை பெற்றுள்ளோம் என்றும் கூறினார். மேலும் கோவை மாவட்டத்தில் ஐம்பது ஆண்டுகளில்லாத வளர்ச்சியை தான், பொறுப்பேற்று 2011க்கு பிறகு கொடுத்துள்ளதாகவும் தெரிவித்தார்.

Exit mobile version