கோவையில் பல்வேறு நலத்திட்டப் பணிகளை தொடங்கி வைத்தார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி

கோவை மாவட்டம் பூலுவபட்டி பேரூராட்சி பகுதியில் பல்வேறு திட்டப் பணிகளை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்.

பூலுவபட்டி பேரூராட்சி பகுதியில் 10 லட்ச ரூபாய் மதிப்பில் சந்தையை மேம்படுத்தும் பணிக்கும், 40 லட்சம் ரூபாய் மதிப்பில் சமுதாயக் கூடத்தை மேம்படுத்தும் பணிக்கும் பூமி பூஜையை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடக்கி வைத்தார்.

வெள்ளிமேடு பகுதியில் 50 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஊரணி மேம்பாட்டு பணி, சாலை மேம்பாட்டு பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி  துவக்கி வைத்தார். இதேபோல், ஆலாந்துறை பேரூராட்சிக்குட்பட்ட காரிமங்கலம் பகுதியில் நீர்த்தேக்க தொட்டி அமைக்கும் பணிகளை துவக்கி வைத்ததுடன், அங்கன்வாடி கட்டடத்தையும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அமைச்சர் எஸ்.பி.வேலுமணி திறந்து வைத்தார்.

Exit mobile version