“எழில்மிகு கோவை” கண்காட்சியை தொடக்கி வைத்தார் அமைச்சர் எஸ். பி. வேலுமணி

கோவையில் நடைபெற்ற “எழில்மிகு கோவை” கண்காட்சியை உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ். பி. வேலுமணி துவக்கி வைத்தார்.

கோவை பீளமேடு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற கண்காட்சி துவக்க விழாவில் தமிழக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி, கோவை மாநகராட்சி ஆணையாளர் சரவன் குமார் கோவை மாவட்ட ஆட்சியர் கு. ராசாமணி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில், பல்வேறு இயற்கை உரம் தயாரிப்பு நிறுவனங்கள் கலந்து கொண்டு, தங்களது படைப்புக்களை காட்சிப்படுத்தியிருந்தனர். விழாவில் பேசிய அமைச்சர் எஸ். பி. வேலுமணி,  கண்காட்சியில் சுமார் 75 க்கும் மேற்பட்ட நிறுவனங்கள் தங்களது புதிய கண்டுபிடிப்புகளை காட்சி படுத்தியுள்ளனர் என்றும், இவற்றின் மூலம் 10 முதல் 100 டன் வரை உள்ள குப்பைகளை சுத்திகரிக்க முடியுமென நிறுவனத்தினர் தெரிவித்துள்ளதாகவும் கூறினார். 

மேலும், இது நடைமுறைப் படுத்தப்படும் போது, எழில்மிகு கோவை என்பது மிகவும் சாத்தியமான ஒன்றாக இருக்கும் என்று தெரிவித்தார். 

Exit mobile version