புதிய வழித்தடத்தில், 8 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தார்

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியில், புதிய வழித்தடத்தில், 8 புதிய பேருந்துகளின் சேவையை அறநிலையத்துறை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் தொடங்கிவைத்தார்.

ஆரணியில் இருந்து திருவண்ணாமலை வழியாக கோயம்புத்தூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து செங்கம் வழியாக சேலம் உள்ளிட்ட பகுதிகளுக்கும், புதிய வழித்தடங்களில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த நிலையில், ஆரணி பழைய பேருந்து நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், 8 புதிய பேருந்துகளின் சேவையை அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் புதிய பேருந்தில் பயணம் செய்து, முதல் பயணச்சீட்டை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் மற்றும் மாவட்ட ஆட்சியர் கந்தசாமி ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

Exit mobile version