முதலமைச்சருக்கு அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் புகழாரம்

நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு அதிக நிதிகளை ஒதுக்கி மகத்தான சாதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி படைத்து வருவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் புகழாரம் சூடியுள்ளார்.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குண்ணத்தூர், ஒண்ணுபுரம், முனுகப்பட்டு, கண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் உள்ள அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளிகளில் 695 மாணவ,மாணவிகளுக்கு 27 லட்சத்து 40 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகளை அமைச்சர் சேவூர் இராமச்சந்திரன் வழங்கினார். அப்போது பேசிய அவர், நடப்பு நிதியாண்டில் பள்ளிக்கல்வித்துறைக்கு மட்டும் 34 ஆயிரத்து 181 கோடி ரூபாய் நிதி ஒதுக்கி, கல்வித்துறையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை படைத்து வருவதாக தெரிவித்தார். மேலும், அனைத்து துறைகளிலும் தமிழகத்தை முதன்மை மாநிலமாக மாற்றி சிறப்பான சாதனைகளை முதலமைச்சர் படைத்து வருகிறார் என்றும் அமைச்சர் கூறினார்.

Exit mobile version