ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம்

வேலூர் தொகுதிக்கு உட்பட்ட தத்துவாச்சாரி, தோட்டப்பாளையம், பெரிய தெரு ஆகிய பகுதிகளில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி.சண்முகத்திற்கு ஆதரவாக அமைச்சர் செங்கோட்டையன் பிரசாரம் செய்தார். அப்போது பேசிய அவர், வேலூர் தொகுதியில் அதிமுக தகுதி வாய்ந்த வேட்பாளரை களத்தில் நிறுத்தியுள்ளதாகவும், அதிமுக கூட்டணி வேட்பாளரை அதிகப்படியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இந்த பிரசாரத்தின் போது அமைச்சர்கள் வெல்லமண்டி நடராஜன், வளர்மதி ஆகியோர் உடனிருந்தனர்.

Exit mobile version