போராட்டக் குழுவினருக்கு அமைச்சர் செங்கோட்டையன் எச்சரிக்கை

தமிழகத்தில் பள்ளிகள் மூடப்படும் என்ற வதந்தியை நிறுத்திக்கொள்ள வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் எச்சரித்துள்ளார். சாரண இயக்கம் சார்பில் சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கலந்து கொண்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தற்போது நியமிக்கப்பட உள்ள தற்காலிக ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது குறித்து முதலமைச்சருடன் கலந்து பேசி முடிவெடுக்கப்படும் என்றார்.

இதனிடையே முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை கிரீன்வேஸ் சாலையில் உள்ள அவரது இல்லத்தில் அமைச்சர் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். பின்னர் செய்தியாயாளர்களிடம் பேசிய அவர், ஆசிரியர்களின் போராட்டம் குறித்து அனைத்து துறை அதிகாரிகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என்றார்.

Exit mobile version