சுதா கருத்தரிப்பு மருத்துவமனையின் புதிய கிளையை திறந்து வைத்தார் அமைச்சர் செங்கோட்டையன்

சென்னையில் சுதா கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவமனையை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார்.

சுதா கருத்தரிப்பு மற்றும் மகளிர் நல மருத்துவமனையின் புதிய கிளை சென்னை எழும்பூரில் அமைக்கப்பட்டுள்ளது. இதனை பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன் திறந்துவைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 1985ஆம் ஆண்டு ஈரோட்டில் துவங்கப்பட்ட சுதா மருத்துவமனையில் டெஸ்ட் டியூப் சிகிச்சை மூலம் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குழந்தைகள் பிறந்திருப்பதாக சுட்டிக் காட்டினார்.

Exit mobile version