உள்ளாட்சி தேர்தலை முன்னிட்டு அமைச்சர் செங்கோட்டையன் தீவிர வாக்கு சேகரிப்பு

கோபிசெட்டிபாளையத்தில் 15 க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில் அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு ஆதரவாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் 2-வது நாளாக வாக்கு சேகரித்தார்.

தமிழகத்தில் வருகிற 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு, வேட்பாளர்களை ஆதரித்து அனைத்து கட்சியினரும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில், அதிமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து அமைச்சர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், கோபி செட்டிபாளையத்தை சுற்றியுள்ள, சிறுவலூர், கோட்டுப் புள்ளாம்பாளையம், அயலூர், கலியங்கம் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட ஊராட்சிகளில், வேட்பாளர்களுக்கு ஆதரவாக, அமைச்சர் செங்கோட்டையன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

Exit mobile version