மாணவர்களுக்கு மடிகணினிகளை வழங்கிய அமைச்சர் செல்லூர் ராஜு

மாணவர்களின் நலனுக்காக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார் என்றும், அதனை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார்.

மதுரை அண்ணா தோப்பில் உள்ள மங்கையர்க்கரசி மேல்நிலைப் பள்ளி மாணவ, மாணவியருக்கு, பள்ளிக்கல்வித்துறை சார்பில், 2 கோடியே 6 லட்சத்து 92 ஆயிரம் ரூபாய் மதிப்பில், இலவச மடிக்கணினிகள் வழங்கப்பட்டது. மாணவர்களுக்கு மடிக்கணினிகளை கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜு வழங்கினார். விழாவில் பேசிய அவர், தமிழக அரசு வழங்கும் திட்டங்களை மாணவர்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார். பெண்களுக்கென நிறைய திட்டங்களை கொண்டு வந்ததால், பெண்களின் நிலை உயர்ந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version