தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா: செல்லூர் ராஜூ

தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா என்று கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கூறினார்.

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தனக்கன் குளம் பகுதியில் கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ மற்றும் நடிகரும் சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டனர். அப்போது பேசிய கூட்டுறவு துறை அமைச்சர் செல்லூர் ராஜூ, தமிழகத்தில் பல திட்டங்களைச் செயல்படுத்தியவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா என்றார். தமிழகத்தை மின் மிகை மாநிலமாக மாற்றியவர் ஜெயலலிதா என்றும் அவர் தெரிவித்தார்.

பின்னர் பேசிய சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெற்று வரும் நிலையில், சதி திட்டம் தீட்டி பதவியை அடைந்து விடலாம் என்று சிந்திப்பவர்கள்தான் திராவிட முன்னேற்ற கழகத்தினர் என்று குற்றம் சாட்டினார்.

Exit mobile version