ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றி செல்லும் : உயர் நீதிமன்றம்

ராசிபுரம் சட்டமன்ற தொகுதியில் அமைச்சர் சரோஜா வெற்றியை செல்லாது என அறிவிக்க கோரிய வழக்கை, சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற பொதுத்தேர்தலில் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தொகுதியில், அதிமுக சார்பில் சமூக நலத்துறை அமைச்சர் சரோஜாவும், திமுக சார்பில் முன்னாள் துணை சபாநாயகர் வி.பி.துரைசாமியும் போட்டியிட்டனர்.

இந்த தேர்தலில் அதிமுக வேட்பாளரான அமைச்சர் சரோஜா, தி.மு.க வேட்பாளர் துரைச்சாமியை விட 9 ஆயிரத்து 631 வாக்குகள் அதிகம் பெற்று வெற்றி பெற்றார்.

தேர்தலில் தோல்வி அடைந்த திமுக வேட்பாளர் வி.பி.துரைச்சாமி, அமைச்சர் வெற்றியை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு மீது அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் நீதிபதி வி.பாரதிதாசன் தீர்ப்பு வழங்கினார். அதில், மனுதாரர் குற்றச்சாட்டுகளை நிரூபிக்காததால், அமைச்சர் சரோஜா வெற்றி பெற்றது செல்லும் என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Exit mobile version