இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்!

கொரோனா தடுப்பு நடவடிக்கையில் சென்னைக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருவதாக, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

சென்னை அயனாவரம் பகுதியில் கொரோனா தடுப்பு பணிகளை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் ஆய்வு மேற்கொண்டார். பொதுமக்களுக்கு முகக்கவசங்களை வழங்கிய அவர், மாற்றுத்திறனாளிகளுக்கு தமிழக அரசு அறிவித்த ஆயிரம் ரூபாயை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர், இந்தியாவிலேயே, தமிழகத்தில் தான் கொரோனா பரிசோதனைகள் அதிகளவில் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்தார். பரிசோதனைகள் அதிகம் மேற்கொள்ளப்படுவதால், தொற்று பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரிப்பதாகவும், இதனால் மக்கள் அச்சப்பட தேவையில்லை எனவும் அமைச்சர் கூறினார். தொடர்ந்து பேசிய அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், கறுப்பர் கூட்டம் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்த தமிழக அரசுக்கு நடிகர் ரஜினி மட்டுமின்றி பல தரப்பு மக்களும் பாராட்டு தெரிவித்து வருவதாக தெரிவித்தார்.

Exit mobile version