ஐ.பெரியசாமிக்கு அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பதிலடி

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் சிறப்பான நடவடிக்கையால் தமிழகம் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குவதாக வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.

மதுரை அண்ணாநகரில் நடைபெற்ற பிரம்ம குமாரிகளின் புதிய கட்டடம் திறப்பு விழாவில் பங்கேற்ற பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஸ்டாலினின் தூண்டுதலின் பேரில் முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமி அறிக்கை வெளியிட்டுள்ளதாகவும், அதிமுகவின் நல்லாட்சியை நாடும், நாட்டு மக்களும் எற்று கொண்டாலும் ஒரு சிலர் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் விமர்சித்தார். மேலும், தமிழகத்தில் உள்ள கிராமங்கள் தோறும் இண்டெர்நெட் கிடைக்க கூடாது என திமுக தலைவர் முட்டுக்கட்டை போடுவதாகவும் விமர்சித்தார்.

Exit mobile version