நாட்டுக்காக வராகா கப்பலை அர்ப்பணித்த அமைச்சர் ராஜ்நாத் சிங்

இந்திய கடற்படைக்காக வடிவமைக்கப்பட்ட வராகா கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்கு அர்ப்பணித்தார்.

சென்னை துறைமுகத்தில் I.C.G.S வராஹா என்ற அதிநவீன ரோந்து கப்பலை பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டிற்காக அர்ப்பணித்தார். இந்த நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் கடற்படை அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர். விஷ்ணுவின் வராக அவதாரத்தை பிரதிபலிக்கும் விதமாக இந்த கப்பலுக்கு வராஹா என பெயரிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Exit mobile version