பொதுக்கூட்டத்தில் தூங்கிய அமைச்சர் ப.சிதம்பரம்

மதுரை மாவட்டம் மேலூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் தூங்கி வழிந்தது விமர்சனங்களுக்கு வழிவகுத்துள்ளது.

மதுரை மக்களவை தொகுதியில் போட்டியிடும் கம்யூனிஸ்ட் வேட்பாளர் வெங்கடேசனை ஆதரித்து, பிரச்சார பொதுக்கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் முத்தரசன், ப.சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொதுக் கூட்டத்தில் முத்தரசன் பேசிக் கொண்டிருந்த போது, ப.சிதம்பரம் உறக்கத்தில் ஆழ்ந்தார். இதைபார்த்த திமுக கூட்டணி கட்சிகளின் தொண்டர்கள், தங்கள் அதிருப்தியை வெளிப்படுத்தினர்.

Exit mobile version