அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்து வைத்தார்

கோவை சுகுணாபுரத்தில் அரசு உயர் நிலைப்பள்ளி கட்டிடத்தை உள்ளாட்சி துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி திறந்து வைத்தார்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் அமைச்சர் வேலுமணியின் தந்தை பழனிசாமி அறக்கடையில் சார்பாக 18 லட்சம் மதிப்பீட்டில் புதிய வகுப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டன. இதனை அமைச்சர் எஸ்பி வேலுமணி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். இந்த நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள், பொதுமக்கள் கலந்து கொண்டனர். அரசின் நலத் திட்ட உதவிகளை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்று அமைச்சர் வேலுமணி அறிவுறுத்தினார்.

Exit mobile version