புதுக்கோட்டையில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்கள் வழங்கும் விழா- சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய அவர், மாற்றுத்திறனாளிகள் சமுதாயத்தில் சமமாக நடத்தப்பட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில் மாற்றுத்திறனாளிகளின் முன்னேற்றத்திற்காக பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருவதாக குறிப்பிட்டார்.

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 37 மாற்றுத்திறனாளிகளுக்கு திருமண நிதியுதவி திட்டத்தின் கீழ் 13 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் திருமண உதவி தொகைக்கான காசோலைகளும், 296 கிராம் தங்க நாணயங்களும் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் விஜயபாஸ்கர் குறிப்பிட்டார். சமூக பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 180 பயனாளிகளுக்கு 22 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய் மதிப்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

Exit mobile version