மீனவ கிராமங்களில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் ஆய்வு

 

கஜா புயலையொட்டி, மீனவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, மீனவ கிராமங்களில் அமைச்சர் ஓ.எஸ். மணியன் நேரில் ஆய்வு மேற்கொண்டார்.

நாகை மாவட்டம் சாமந்தன்பேட்டை, நம்பியார் நகர் உள்ளிட்ட மீனவ கிராம பஞ்சாயத்தார்களை சந்தித்த கைத்தறித்துறை அமைச்சர் ஓ.எஸ்.மணியன், மீனவ கிராம மக்களை பாதுகாப்பான பகுதிக்கு செல்லவும், அரசு ஏற்பாடு செய்துள்ள முகாம்களில் தங்கி இருக்குமாறும் அறிவுறுத்தினார்.

கடற்கரை பகுதிகளுக்கு சென்ற அவர், கடல் சீற்றமாக உள்ளதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும், அதே போல் கரையோரங்களில் நிறுத்தப்பட்டுள்ள படகுகளை மேடான பகுதிகளுக்கு கொண்டு வரவும் மீனவர்களிடம் வலியுறுத்தினார்.

Exit mobile version