ஊரகவளர்ச்சித்துறையின் புதிய திட்டப்பணிகளை துவக்கிவைத்த அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்

கரூர் அருகே, ஊரகவளர்ச்சித்துறையின் சார்பில் சுமார் 67 லட்சம் ரூபாய் மதிப்பிலான புதிய திட்டப்பணிகளை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கிவைத்தார்.

கரூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆத்தூர் பூலாம்பாளையம் ஊராட்சியில் உள்ள வீரசோளிபாளையத்தில், 15 லட்சம் ரூபாய் மதிப்பிலும், நன்னியூர் துவரபாளையம் பகுதியில் 14 லட்சம் ரூபாய் மதிப்பிலும், கடம்பங்குறிச்சி பண்டுகதாரன்புதூர் பகுதியில் 11 லட்சம் ரூபாய் மதிப்பிலும் கட்டப்பட்டுள்ள புதிய சமுதாயக்கூட கட்டடங்களை, போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்தார். அதே போன்று, மண்மங்கலம் அண்ணாநகர் பகுதியில் 7 லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்டுள்ள அங்கன்வாடி மையத்தையும் திறந்து வைத்த அவர், நெரூர் வடக்கு ஊராட்சியில் ஒத்தக்கடை பகுதியில் தானியக்களம் அமைப்பதற்கான பூமி பூஜை பணிகளையும் துவக்கி வைத்தார்.

Exit mobile version