லட்சுமி நரசிம்ம சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பங்கேற்பு

கோவை மாவட்டம் உக்கடத்தில் உள்ள லட்சுமி நரசிம்ம சுவாமி கோயிலில் நடைபெற்ற குடமுழுக்கு விழாவில் உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.

குடமுழுக்கை முன்னிட்டு நேற்று இரவு முதல் யாகசாலை பூஜைகள் நடைபெற்றது. அதனை தொடர்ந்து காலை சுவாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு, சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் ஓத, மேள தாளங்கள் முழங்க, கோபுர கலசங்களில் புனித நீர் ஊற்றப்பட்டு குடமுழுக்கு நடைபெற்றது. குடமுழுக்கு விழாவில், உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

Exit mobile version