ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி ரத்ததானம் செய்த அமைச்சர் கே.சி.வீரமணி

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் வணிக வரித்துறை அமைச்சர் கே.சி.வீரமணி ரத்ததானம் செய்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளையொட்டி திருப்பத்தூர் மாவட்ட அதிமுக சார்பில் திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் இன்று பிறந்த 15 குழந்தைகளுக்கு தலா 2 ஆயிரம் ரூபாயை பரிசாக வழங்கப்பட்டது.

இதையடுத்து, வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத்துறை அமைச்சர் கே.சி.வீரமணி, திருப்பத்தூர் முன்னாள் எம்எல்ஏ ரமேஷ் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்டோர் ரத்ததானம் செய்தனர். இதேபோல், ஜோலார்பேட்டை, நாட்றம்பள்ளி புதுப்பேட்டை, பாச்சல் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Exit mobile version