“எம்.ஜி.ஆர் சாதனையை அ.தி.மு.க மீண்டும் படைக்கும்” – அமைச்சர் காமராஜ்!

3 முறை தொடர்ந்து ஆட்சியை பிடித்த எம்.ஜி.ஆரின் சாதனையை, அதிமுக மீண்டும் படைக்கும் என உணவுத்துறை அமைச்சார் காமராஜ் தெரிவித்துள்ளார்.

திருவாரூரில் அதிமுக சட்டமன்ற தொகுதி வாக்குச்சாவடி நிலை முகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட உணவுத்துறை அமைச்சரும், திருவாரூர் மாவட்ட கழகச் செயலாளருமான காமராஜ் கலந்துகொண்டார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், வருகிற தேர்தலிலும் வெற்றி பெற்று, தொடர்ந்து 3 முறை ஆட்சியை கைப்பற்றிய புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆரின் சாதனையை அதிமுக மீண்டும் படைக்கும் என நம்பிக்கை தெரிவித்தார்.

Exit mobile version