திருச்சியில் அரசு பொருட்காட்சியை தொடங்கி வைத்தார் அமைச்சர் கடம்பூர் ராஜு

2020 ஆம் ஆண்டிற்கான அரசு பொருட்காட்சியை செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு தொடங்கி வைத்தார்.

திருச்சியில் உள்ள அண்ணா கலையரங்கில் அரசுப் பொருட்காட்சி துவக்க விழாவை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்து வைத்தார். பின்னர் 500க்கும் மேற்பட்ட பயனாளிகளுக்கு 1,67,65,000 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். நிகழ்ச்சியில், சுற்றுலாத்துறை அமைச்சர் வெல்லமண்டி நடராஜன், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் வளர்மதி, செய்தி மக்கள் தொடர்புத் துறை இயக்குநர் சங்கர், மாவட்ட ஆட்சியர் சிவராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கடம்பூர் ராஜு,  தமிழக அரசு அறிவித்த திட்டங்களை 100 சதவீதம் நிறைவேற்றி வருவதாக கூறினார்.

Exit mobile version