மீன்களின் தரத்தினை ஆய்வு செய்ய அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவு

தமிழகத்தில் உள்ள மீன் சந்தைகளில், மீன்களின் தரத்தினை ஆய்வு செய்ய மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

மதுரை, கரிமேடு மீன் மார்கெட்டில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்ட போது, வெளி மாநிலங்களிலிருந்து கொண்டு வரப்பட்ட மீன்கள் தரம் குறைவானதாகவும், கெட்டுப்போன நிலையிலும் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து கெட்டுப்போன சுமார் 2 டன் எடையுள்ள மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இந்த நிலையில், தமிழகம் முழுவதும் உள்ள மீன் சந்தைகளில் ஆய்வு மேற்கொள்ளவும், தரத்தினை உறுதி செய்யவும், அவ்வாறு தரம் குறைந்த மீன்கள் விற்பனை செய்யப்பட்டால் விற்பனையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பட்டுள்ளது. எதிர்காலத்தில், இத்தகைய நிகழ்வுகள் நடக்காமல் இருக்க தமிழகம் முழுவதும் உள்ள சந்தைகளில் உணவு பாதுகாப்பு மற்றும் மீன்வளத்துறை அதிகாரிகளுக்கு அமைச்சர் ஜெயக்குமார் அறிவுறுத்தியுள்ளார்.

Exit mobile version