கருணாநிதியின் திமுக பிரசாந்த் கிஷோர் திமுகவாக மாறிவிட்டது : அமைச்சர் ஜெயக்குமார்

கருணாநிதியின் திமுக தற்போது பிரசாந்த் கிஷோரின் திமுகவாக மாறிவிட்டதாக, மீன்வளத்துறை அமைச்சர் ஜெயகுமார் விமர்சித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 72வது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை யானைக்கவுனி பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் ஜெயக்குமார் தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பட்டியலின மக்களை கீழ்த்தரமாக பேசி ஆர்.எஸ்.பாரதி விமர்சித்துள்ளதாகவும், திமுகவின் உண்மை முகத்தை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் கூறினார். தமிழகம் அமைதியாக இருப்பது ஸ்டாலினுக்கு உறுத்துவதாக விமர்சித்த அவர், சிறுபான்மையின மக்களுக்கு அதிமுக அரசு அரணாக உள்ளதாகவும் குறிப்பிட்டார். குடியுரிமை திருத்த சட்டத்தால் இஸ்லாமியர்களுக்கு பாதிப்பில்லை என தெரிவித்த அமைச்சர் ஜெயக்குமார், இஸ்லாமியர்கள் தங்கள் போராட்டத்தை கைவிட வேண்டும் என வலியுறுத்தினார்.

Exit mobile version