இந்திய அளவில் தமிழகம் சிறந்து விளங்குவதாக அமைச்சர் பெருமிதம்

இந்திய அளவில் சிறந்த தொழிற்பயிற்சி நிலையங்களாக தமிழகத்தை சேர்ந்த 20-க்கும் மேற்பட்ட அரசு பயிற்சி நிலையங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரை மாவட்டம், புதூர் அரசு தொழிற்பயிற்சி பள்ளியில் மூன்றாம் ஆண்டு பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இதில், சிறப்பு விருந்தினராக கூட்டுறவுத்துறை அமைச்சர் செல்லூர் ராஜூ கலந்து கொண்டு, மாணவர்களுக்கு பட்டங்களை வழங்கினார். மதுரை மாவட்ட ஆட்சியர், சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செல்லூர் ராஜூ, இந்திய அளவில் சிறந்த தொழிற்பயிற்சி நிலையங்களாக தமிழகத்தை சேர்ந்த 27 அரசு பயிற்சி நிலையங்களும், 13 தனியார் பயிற்சி நிலையங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக கூறினார்.

Exit mobile version