தூத்துக்குடியில் ரூ.2.25 கோடியில் 9 புதிய பேருந்துகளை அமைச்சர் துவக்கி வைத்தார்

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பில் 9 புதிய அரசு பேருந்துகளை விளம்பரம் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ துவக்கி வைத்தார்.

தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில் அரசு போக்குவரத்து கழகம் சார்பில் புதிய அரசு பேருந்துக்கள் துவக்க விழா மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தலைமையில் நடைபெற்றது. விழாவில் அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்துகொண்டு 2 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பிலான 9 புதிய பேருந்துக்களை பொதுமக்களின் பயன்பாட்டிற்காக கொடியசைத்து துவக்கி வைத்தார்.

இதையடுத்து முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த 13 ஆம் தேதி திறந்து வைத்த வட்டாட்சியர் அலுவலகத்தை அமைச்சர் கடம்பூர் ராஜூ குத்துவிளக்கேற்றி பணிகளை துவக்கி வைத்தார். தொடர்ந்து, 33 பயனாளிகளுக்கு முதியோர் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, புதிய குடும்ப அட்டை உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை அமைச்சர் கடம்பூர் ராஜூ வழங்கினார்.

Exit mobile version