முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் துரைக்கண்ணு புகழாரம்

100 ஆண்டுகளில் செய்ய வேண்டிய சாதனைகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 3 ஆண்டுகளில் செய்துள்ளதாக வேளாண்மைத்துறை அமைச்சர் துரைக்கண்ணு தெரிவித்துள்ளார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி தஞ்சை மணிமண்டபத்தில் நடைபெறுகிறது. புகைப்பட கண்காட்சியை அமைச்சர் துரைக்கண்ணு குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

புகைப்பட கண்காட்சியை அமைச்சர் துரைக்கண்ணு, மாநிலங்களவை உறுப்பினர் வைத்திலிங்கம் ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் துரைக்கண்ணு, குடிமராமத்து திட்டத்தை செயல்படுத்துவதில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளதாக கூறினார்.

Exit mobile version