பாமக வேட்பாளரை ஆதரித்து அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரிப்பு

விழுப்புரம் தொகுதி பா.ம.க வேட்பாளர் வடிவேல் ராவணனை ஆதரித்து சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் விக்கிரவாண்டி தொகுதியில் கிராமம் கிராமமாகச் சென்று வாக்கு சேகரித்தார்

விழுப்புரம் மக்களவை தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பில் பாமகவை சேர்ந்த வடிவேல் ராவணன் போட்டியிடுகிறார். அவரை ஆதரித்து அமைச்சர் சி.வி.சண்முகம் தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். விக்கிரவாண்டி தொகுதியில் உள்ள பனையபுரம், வாக்கூர், மதுரப்பாக்கம், தொரவி, ராதாபுரம் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு சென்ற அவர், திறந்த வேனில் நின்றபடி மாம்பழம் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார். அவருக்கு பெண்கள் ஆரத்தி எடுத்தும், மலர் தூவியும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த பிரசாரத்தில் கூட்டணி கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.

Exit mobile version