ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அமைச்சர் சி.வி. சண்முகம் நிவாரணப் பொருட்களை வழங்கினார்!!!

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில், தூய்மைப் பணியாளர்கள், காவல்துறையினர் உள்ளிட்டோருக்கு, சட்டத்துறை அமைச்சர் சி.வி. சண்முகம் நிவாரணப் பொருட்களை வழங்கினார். விக்கிரவாண்டி அருகே உள்ள பனையபுரத்தில, அஇஅதிமுக தெற்கு ஒன்றியம் சார்பில், நிவாரணப் பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்று, பொதுமக்கள், தூய்மை பணியாளர்கள், காவல்துறையினர் உட்பட 600 பேருக்கு, அரிசி, காய்கறி, மளிகைப் பொருட்கள் அடங்கிய நிவாரண தொகுப்பை வழங்கினார். பயனாளிகள், முகக்கவசம் அணிந்தும், சமூக இடைவெளியைக் கடைபிடித்தும் நிவாரணப் பொருட்களை பெற்றுச்சென்றனர். இந்தநிகழ்ச்சியில் விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் முத்தமிழ்செல்வன், அதிமுக தெற்கு ஒன்றிய செயலாளர் முகுந்தன் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version