மக்கள் குறை தீர்ப்பு முகாமில் அமைச்சர் சி.வி.சண்முகம் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம்  தலைமையில், மக்கள் சிறப்பு குறை தீர்ப்பு முகாம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்ற இந்த முகாமில், ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் இருந்து அமைச்சர் சி.வி.சண்முகம், மனுக்களை பெற்றார். மேலும், உரிய மனுக்கள் மீது உடனடியாக தீர்வு காண வேண்டும் என மாவட்ட ஆட்சியர், மற்றும் துறை சார்ந்த அதிகாரிகளுக்கு அமைச்சர் உத்தரவிட்டார்.

முன்னதாக நிகழ்ச்சிக்கு வருகை தந்த அமைச்சருக்கு பட்டாசு வெடித்தும், சால்வை அணிவித்தும் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனை தொடர்ந்து முகாமில் அமைக்கப்பட்டிருந்த தோட்டக்கலை, விவசாயம், சுகாதாரம் ஆகிய துறைகளை சார்ந்த பொருட்களை அமைச்சர் பார்வையிட்டார்.

அதன் பின் முகாமில் ஏழை, எளிய மக்களுக்கு மூன்று சக்கர வண்டி, மருந்து அடிக்கும் இயந்திரம் மற்றும் நீர் தெளிப்பான் போன்ற பொருட்களையும் அமைச்சர் வழங்கினார். நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை, அதிமுக நிர்வாகிகள், அரசு அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.

Exit mobile version