திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை…

வேலூர் மக்களவைத் தேர்தலையொட்டி அணைக்கட்டு தொகுதிக்குப்பட்ட பல்வேறு இடங்களில் அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரித்தார். வேலூர் மக்களவைத் தேர்தல் வரும் 5ஆம் தேதி நடைபெற உள்ளது. அதிமுக கூட்டணி சார்பில் புதிய நீதிக் கட்சித் தலைவர் ஏ.சி.சண்முகம் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர்கள், அதிமுக மூத்த நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

இந்தநிலையில் அணைக்கட்டு தொகுதிக்குட்பட்ட சத்தியமங்கலம் கன்னிகாபுரம், செதுவாலை விரிஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அமைச்சர் சி.வி.சண்முகம், திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் இதுவரை நிறைவேற்றவில்லை என்று குற்றம்சாட்டினார்.

அதிமுக கொடுத்த பல்வேறு வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும், தொடர்ந்து மக்கள் நலத்திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, செயல்படுத்தப்பட்டு வருவதாவும் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.

Exit mobile version