பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்த வீரரின் குடும்பத்திற்கு அமைச்சர் அமித் ஷா ஆறுதல்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிரிழந்த அர்ஷத் கானின் குடும்பத்தினரை, உள்துறை அமைச்சர் அமித் ஷா நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

ஜம்மு காஷ்மீரைச் சேந்த காவல்துறை ஆய்வாளரான அர்ஷத் கான், பயங்கரவாதிகளுடனான சண்டையில் கடந்த ஜூன் 12ம் தேதி கொல்லப்பட்டார். அவரது மறைவுக்கு பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், 2 நாள் பயணமாக ஜம்மு காஷ்மீர் சென்றுள்ள உதுள்துறை அமைச்சர் அமித் ஷா, அனந்தநாக் பகுதியில் உள்ள அர்ஷத் கானின் இல்லத்திற்கு சென்றார். அங்கு, அர்ஷத் கானின் குடும்பத்தினரை சந்தித்த அமித் ஷா, அவர்களுக்கு ஆறுதல் தெரிவித்தார்.

Exit mobile version