சிவகாசியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டி: வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கப்பட்டது

சிவகாசியில் நடைபெற்ற மினி மாரத்தான் போட்டியில் மாணவ மாணவியர் ஆர்வத்துடன் பங்கேற்றனர்.

உச்சநீதிமன்றத் தீர்ப்பால் பட்டாசுத் தொழிலுக்கு ஏற்பட்டிருக்கும் பாதிப்பு பற்றி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த மினி மாரத்தான் போட்டி நடத்தப்பட்டது. சிவகாசி முஸ்லிம் மேல்நிலை பள்ளியில் தொடங்கிய மினி மாரத்தான் நகரின் பிரதான வீதிகளின் வழியே JCI மேல்நிலைப்பள்ளி மைதானத்தை வந்தடைந்தது. இதில் பள்ளி மாணவர் பிரிவில் கோயம்புத்தூரை சேர்ந்த கோகுலும், மாணவியர் பிரிவில் சந்தியாவும் முதலிடம் பிடித்தனர். இதைப்போல் கல்லூரி மாணவர் பிரிவில் திருநெல்வேலியைச் சேர்ந்த அஜித்குமாரும், மாணவியர் பிரிவில் சிவகாசியை சேர்ந்த மாலையம்மாளும் முதல் இடம் பிடித்தனர். வெற்றி பெற்றவர்களுக்கு காவல் கண்காணிப்பாளர் பிரபாகரன் பரிசுகளை வழங்கினார்.

Exit mobile version