ஆவின் பால் வாகனத்தை, பால் உற்பத்தியாளர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில், பால் கொள்முதல் செய்யவில்லை என குற்றம்சாட்டி, ஆவின் பால் வாகனத்தை பால் உற்பத்தியாளர்கள் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் உற்பத்தி செய்யப்படும் பாலை, ஆவின் அதிகாரிகள் கொள்முதல் செய்ய மறுப்பதாக அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

இதுகுறித்து புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதால், ஆவின்பால் வாகனத்தை சிறைபிடித்து போராட்டம் நடத்தினர்.

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறை அதிகாரிகள், சமரசப் பேச்சுவார்த்தை நடத்தியதை தொடர்ந்து போராட்டக்காரர்களின் பாலை ஆவின் நிர்வாகம் பெற்றுக்கொண்டது.

Exit mobile version