இன்று முதல் அமலுக்கு வருகிறது பால் விலை உயர்வு

ஆவின் பால் விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருகிறது.

பசுந்தீவனம் உள்ளிட்ட இடுபொருட்களின் விலை 4 ஆண்டுகளில் உயர்ந்துள்ளதால், பால் கொள்முதல் விலையை உயர்த்தி தர வேண்டும் என்று பால் உற்பத்தியாளர் சங்கங்கள் மற்றும் பால் உற்பத்தியாளர்கள் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வந்தனர்.

அதனை கருத்தில் கொண்டு 4 லட்சத்து 60 ஆயிரத்திற்கும் மேலான பால் உற்பத்தியாளர்கள் பயன் அடையும் வகையில் பசும்பால் கொள்முதல் விலையை லிட்டர் ஒன்றுக்கு 28 ரூபாயிலிருந்து 32 ரூபாயாக அதாவது 4 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதேபோன்று எருமைப்பால் கொள்முதல் விலை லிட்டர் ஒன்றுக்கு 35 ரூபாயிலிருந்து 41 ரூபாயாக, அதாவது 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. கடந்த சனிக்கிழமை இதற்கான அறிவிப்பு வெளியானது.

நுகர்வோருக்கு நல்ல தரமான பால் தொடர்ந்து வினியோகம் செய்வதை உறுதிப்படுத்தவும், பால் உற்பத்தியாளர் ஒன்றியங்களின் கூட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் அனைத்து வகையான ஆவின் பால் விற்பனை விலை லிட்டர் ஒன்றுக்கு 6 ரூபாய் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பால் கொள்முதல் மற்றும் விற்பனை விலை உயர்வு இன்று முதல் அமலுக்கு வருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Exit mobile version