தற்கொலை படை தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளின் விவரத்தை கைப்பற்றிய ராணுவம்

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ராணுவத்தினர் மீது தற்கொலை படை தாக்குதலில் ஈடுபட்ட பயங்கரவாதிகளின் விவரத்தை ராணுவம் கைப்பற்றியுள்ளது. இதையடுத்து, அவர்களை அழிக்கும் பணியில் ராணுவம் தீவிரம் காட்டி வருகிறது.

புல்வாமாவில் ராணுவத்தினர் மீது நடத்தப்பட்ட தற்கொலை படை தாக்குதலுக்கு பாகிஸ்தானில் இயங்கி வரும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு பொறுப்பேற்றது. இதை இந்திய ராணுவம் உறுதிபடுத்தியதையடுத்து, தாக்குதலுக்கு முக்கிய காரணமான வாதா குஹாசி என்பவரை ராணுவம் அடையாளம் கண்டுள்ளது.

தாக்குதலை பொறுப்பேற்று நடத்திய காஸியை ராணுவம் சுட்டுக் கொன்றதையடுத்து, பயங்கரவாதிகள் மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதிகளுக்குள் சென்றுவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து அவர்களின் விவரங்களை அறிந்து பயங்கரவாதிகளை அழிக்கும் பணியில் ராணுவம் ஈடுபட்டுள்ளது.

Exit mobile version