ஜம்மு காஷ்மீரில் துப்பாக்கி சண்டையில் தீவிரவாதி சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லா பகுதியில் பதுங்கியிருந்த தீவிரவாதியை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்றனர்.

பாரமுல்லா பகுதியில் தீவிரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகப்பு படை வீரர்களுக்கு தகவல் கிடைத்தது. தீவிரவாதிகள் இருந்த இடத்தை சுற்றி வளத்த பாதுகாப்பு படையினர், தேடும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, தீவிரவாதிகள் துப்பாக்கி சூட்டில் ஈடுபட்டனர். பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் கொடுத்ததில் தீவிரவாதி ஒருவன் சுட்டுக் கொள்ளப்பட்டான். தீவிரவாதிகள் சுட்டதில் சிறப்பு காவல் அதிகாரி ஒருவர் வீரமரணம் அடைந்தார். இதையடுத்து, அந்த பகுதி முழுவதும் பாதுகாப்பு படையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

Exit mobile version