தமிழகம், புதுச்சேரியில் லேசான மழைக்கு வாய்ப்பு : வானிலை ஆய்வு மையம்

தெற்கு அரபிக்கடல் பகுதியில் சூறைக்காற்று வீசும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீன்வர்கள் அங்கு மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்மேற்கு வங்கக்கடலில் நிலவும் காற்றழுத்த சுழற்சி காரணமாக, அடுத்த 24 மணி நேரத்திற்கு, தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் அறிவித்துள்ளது. சென்னையை பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தெற்கு அரபிக்கடல் பகுதியில் 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் அந்த பகுதிக்கு செல்ல வேண்டாம் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.

Exit mobile version