மியாமி விமான நிலையத்திற்கு மிரட்டல் விடுத்த உ.பி மாணவர் கைது

அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தை தகர்க்க போவதாக மிரட்டல் விடுத்த உத்தர பிரதேச இளைஞரை தீவிரவாத ஒழிப்பு படையினர் கைது செய்தனர்.
இண்டெர்நெட் அழைப்பு மூலம் கடந்த மாதம் அமெரிக்காவின் மியாமி விமான நிலையத்தை தகர்க்க போவதாக மர்ம நபர் ஒருவர் தொடர்ந்து மிரட்டல் விடுத்து வந்தார். அவரது ஐ.பி முகவரியை ஆராய்ந்ததில், மிரட்டல் விடுத்த நபர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்று தெரியவந்தது. அந்நபரை கண்டுபிடிக்கக் கோரி தேசிய புலானாய்வு முகமைக்கு அமெரிக்கா கோரிக்கை விடுத்தது. . அதன்படி உத்தர பிரதேச மாநில தீவிரவாத ஒழிப்பு படையினர் பிலால் என்ற மாணவரை கைது செய்து விசாரித்தனர். விசாரணயில் 1000 டாலர்களுக்கு பிட் காயின்களை வாங்கி ஏமாந்ததாகவும், தன் பணத்தை மீட்டுத்தரக் கோரி அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐயிடம் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்து விமான நிலையத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாக அவர் கூறினார்.

 

Exit mobile version