வருகிற 17ஆம் தேதி எம்.ஜி.ஆரின் 103-வது பிறந்தநாள் விழா

அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் 103-ஆவது பிறந்தநாள் விழா, வருகிற 17ஆம் தேதி கொண்டாடப்படுகிறது.

இது தொடர்பாக அதிமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரின் பிறந்தநாள் விழாவையொட்டி, வருகிற 17ஆம் தேதி தலைமை அலுவலகத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலைக்கு காலை 10 மணிக்கு கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள், நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொள்ள கேட்டு கொள்ளப்பட்டுள்ளது.

Exit mobile version