ஊராட்சிமன்ற அலுவலகத்தில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா படங்கள் அகற்றம் – மக்கள் அதிர்ச்சி

தென்காசி மாவட்டம் திப்பனம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தில் முன்னாள் முதலமைச்சர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படங்களை அகற்றி, ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

திப்பனம்பட்டி ஊராட்சிமன்ற அலுவலகத்தின் முகப்பு அறையில் முதலமைச்சர் ஸ்டாலின் புகைப்படமும், உள் அறையில் முன்னாள் முதலமைச்சர்களான புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர் மற்றும் புரட்சித் தலைவி ஜெயலலிதா ஆகியோரின் புகைப்படம் வைக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் ஊராட்சிமன்ற அலுவலகத்திற்கு சென்ற திமுக எம்.பி. தனுஷ்குமார், முன்னாள் முதலமைச்சர்களின் புகைப்படத்தை அகற்றி, அந்த இடத்தில் ஸ்டாலின் புகைப்படத்தை மாட்டினார். மேலும், கீழப்பாவூர் யூனியனில் உள்ள அனைத்து ஊராட்சிமன்ற அலுவலகங்களிலும் ஸ்டாலின் படத்தை வைக்க வட்டார வளர்ச்சி அலுவலரிடம் திமுக எம்.பி. தனுஷ் குமார் உத்தரவிட்டார். இதனை அறிந்த அதிமுக தொண்டர்கள் அங்கு திரண்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Exit mobile version