அதிமுக 48 ஆம் ஆண்டுத் தொடக்க விழா : எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு முதல்வர் , துணை முதல்வர் மரியாதை

அதிமுகவின் 48ஆவது ஆண்டுத் தொடக்க விழாவையொட்டிச் சென்னையில் உள்ள தலைமை அலுவலகத்தில் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தியதுடன் கொடியேற்றி வைத்துத் தொண்டர்களுக்கு இனிப்பு வழங்கினர்.

அதிமுக கட்சியை எம்ஜிஆர் தொடங்கி வைத்து 47ஆண்டுகள் நிறைவடைந்து 48ஆவது ஆண்டு தொடக்க விழா இன்று நடைபெறுகிறது. இதையொட்டிச் சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமையகத்தில் நடைபெற்ற விழாவில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், அவைத்தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்துகொண்டனர். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா சிலைகளுக்குத் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

அதிமுகவின் 48ஆம் ஆண்டுத் தொடக்க விழாவில் கலந்துகொண்ட தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் முதலமைச்சரும் துணை முதலமைச்சரும் இனிப்பு வழங்கி மகிழ்ந்தனர். விடாமல் மழை பெய்ததையும் பொருட்படுத்தாமல் விழாவுக்கு வந்திருந்த தொண்டர்கள் எம்ஜிஆர், ஜெயலலிதா சிலைகளுக்கு மரியாதை செலுத்தினர்.

 

Exit mobile version