திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் எம்.ஜி.ஆர் : முதலமைச்சர் பழனிசாமி

திரைப்படங்கள் மூலம் தனக்கென தனி முத்திரை பதித்தவர் எம்.ஜி.ஆர். என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.

சேலம் மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற எம்.ஜி.ஆர் பிறந்தநாள் விழாவில் உரையாற்றிய முதலமைச்சர், நல்ல கருத்துள்ள பாடல்கள் மூலம் இளைஞர்களுக்கு நல்ல வழிக்காட்டியாக எம்.ஜி.ஆர். இருந்ததாக கூறினார். தற்போதைய திரைப்படங்களை பார்த்தால் பிள்ளைகள் கெட்டுவிடுவார்கள் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய முதலமைச்சர், வாரிசு அரசியல் செய்யும் கட்சி திமுக என சாடினார். கருணாநிதிக்கு பிறகு ஸ்டாலின், ஸ்டாலினுக்கு பிறகு உதயநிதி ஸ்டாலின் என திமுகவில், வாரிசுகள் மட்டுமே தலைமைப் பதவி வர முடியும் என்றார். திமுகவிற்காக உழைத்த அடிமட்ட தொண்டர்களுக்கும் நிர்வாகிகளுக்கும் எந்த பலனும் இல்லை என்று முதலமைச்சர் விமர்சித்தார். அதிமுகவில் இருப்பவர்கள் அனைவருமே முதலமைச்சர் ஆவதற்கு தகுதியானவர்கள் என்றார். அதிமுகவில் ஒரு பழனிசாமி அல்ல, ஓராயிரம் பழனிசாமிகள் இருப்பதாக முதலமைச்சர் தெரிவித்தார்.

Exit mobile version