எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் வரும் 17-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படும் – அ.தி.மு.க.

அ.தி.மு.க. நிறுவன தலைவரும், முன்னாள் முதலமைச்சருமான எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா 17-ம் தேதி சிறப்பாக கொண்டாடப்படவுள்ளதாக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 102-வது பிறந்தநாள் விழா வரும் 17-ம் தேதி நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் எம்.ஜி.ஆரின் திருவுருவ சிலைக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சியில் கட்சியின் பல்வேறு பிரிவுகளை சேர்ந்த நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Exit mobile version